சமூக நெட்வொர்க் என்பது இளைஞர்கள் மத்தியில் மட்டும் இல்லை பல வயதினரையும் கவர்ந்துவிட்டது. ஃபேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ், ட்வீட்டர், லிங்க்ட்இன் போன்ற பல சமூக நெட்வொர்க்கள் உள்ளன. இந்தியாவில் பிரபலமான நெட்வொர்க்களில் ஒன்று ஃபேஸ்புக். மொபைல் போன் சேவை வழங்குவதில் பிரபலமான ஒரு கம்பெனி ஏர்செல். இந்த இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சேவையை அறிவித்துள்ளனர். இனி நீங்கள் ஃபேஸ்புக்கில் சேர இன்டர்நெட்டோ, கம்ப்யூட்டரோ தேவை இல்லை. ஒரு ஏர்செல் சிம் கார்டு, சாதாரண கருப்பு வெள்ளை மொபைல் போன் கூட போதும். நீங்கள் SMS வழியாக ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்ப முடியும். இதற்கு ஆகும் கட்டணம் SMS ஒன்றிற்கு 50 காசு. இதை நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் அக்கௌன்ட்டில் முடுக்கிவிட மூன்றே நிமிடங்கள் தான். நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.
ஃபேஸ்புக் செட்டிங்க்ஸ் செல்லவும்



